Press "Enter" to skip to content

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்

தமிழக்கத்தில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

சென்னை:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா ஏற்கனவே மே 3 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. 

இதற்கிடையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளது. 

அதாவது மே 17 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் ஊரடங்கு நீட்டிப்பிற்கு தமிழக அரசு ஒப்புத்தல் அளித்துள்ளது. 

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »