Press "Enter" to skip to content

டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4122 ஆக உயர்வு

டெல்லியில் மேலும் 384 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4122 ஆக அதிகரித்துள்ளது.

பரிசோதனை செய்யும் ஊழியர்

டெல்லியில் மேலும் 384 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4122 ஆக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி: 

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 384 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4122 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உள்ளது என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »