Press "Enter" to skip to content

சென்னை கொரோனா ஆஸ்பத்திரிகள் மீது உலங்கூர்தியில் இருந்து மலர் தூவல்

டாக்டர்கள்-நர்சுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக சென்னை கொரோனா ஆஸ்பத்திரிகள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.

சென்னை:

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு டாக்டர்கள், நர்சுகள் இரவு-பகலாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்களின் இந்த உன்னதமான சேவை பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களை பாராட்டும் விதமாக வீடுகளில் இருந்த படி கைதட்டி நன்றி தெரிவியுங்கள் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி நாடு முழுவதும் வீடுகளில் இருந்தபடி மக்கள் கைகளை தட்டி தங்களது நன்றியை தெரிவித்தனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகளுக்கு முப்படை சார்பில் நன்றி செலுத்தும் விதமாக இன்று கொரோனா ஆஸ்பத்திரிகள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்படும் என்று முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் தெரிவித்தார்.

அவர் கூறும்போது, டாக்டர்கள், நர்சுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்திய விமானப்படை போர் விமானங்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் சிப்ருகார் முதல் கட்சு வரையில் இன்று பறந்து செல்லும்.

அதே நேரத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத் திரிகள் மீது விமானப்படை மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்கள் மலர் தூவும். கடலில் கடற்படை கப்பல்கள் அணிவகுப்புகள் நடத்தி வண்ண விளக்கு ஒளியில் மிளிரும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா ஆஸ்பத்திரி முன்பு ராணுவம் சார்பில் பேண்டு-வாத்தியம் இசைக்கப்படும்.

அதன்படி இன்று கொரோனா ஆஸ்பத்திரி மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி ஆகியவை மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.

அப்போது டாக்டர்கள், நர்சுகள் மருத்துவமனை முன்பு நின்றபடி ஹெலிகாப் டர்களை பார்த்து கையசைத் தனர். ஹெலிகாப்டர்கள் சுமார் 500 முதல் 1000 மீட்டர் உயரத்தில் பறந்து சென்று மலர் தூவியதை பொதுமக்கள் வீட்டு மொட்டை மாடிகளில் நின்று கண்டு ரசித்தனர். கலங்கரைவிளக்கம் அருகே உள்ள கடல் பகுதியில் இன்று இரவு கப்பல்கள் மின் விளக்குகளை ஒளிர செய்தும், சைரன்களை ஒலித்தும் டாக்டர்கள், நர்சுகளுக்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அப்போது வான வேடிக்கையும் நிகழ்த்தப்படுகிறது.

கோவை, சூலூர் விமானப்படை பிரிவு சார்பில் சி-130 சரக்கு போக்குவரத்து விமானங்கள் இரண்டு இன்று மாலை 5.40 மணி முதல் 6 மணி வரை 15 நிமிடங்கள் கோவை நகரை சுற்றி வட்ட மிட உள்ளன.

தலைநகர் டெல்லியில் காலை 10.30 மணியளவில் இந்திய போர் விமானங்கள் ஆஸ்பத்திரிகள் மீது மலர்களை தூவின. டி.கங்காராவ் ஆஸ்பத்திரி, ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷல்டி மற்றும் தீனதயாள், உபத்யா ஆஸ்பத்திரி மீது மலர்கள் தூவப்பட்டன.

மத்திய டெல்லியில் உள்ள  ராஜபாதையில் இன்று காலை போர் விமானங்களான சுபாய்-30, எம்.கே.ஐ.,  மிக்-29 மற்றும் ஜாக்குவார் விமானங்கள் பறந்தன. அதன்பின் 30 நிமிடங்கள் டெல்லி நகர் முழுவதும் விமானங்கள் பறந்து சென்றன. இந்திய விமானப்படை யின் சி-130 போக்குவரத்து விமானமும்  டெல்லியில் பறந்து சென்றது.

மும்பையில் கிங் ஹெட் வோர்ட் மெமோரியல் ஆஸ்பத்திரி, கஸ்தூரிபா ஆஸ்பத்திரி உள்ளிட்ட கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகள் மீது இந்திய போர் விமானங்கள் மலர்கள் தூவின. மும்பையில் 5 கடற்படை கப்பல்கள் இரவு 7.30 மணி முதல் 11.59 மணி வரை அணிவகுத்து செல்கிறது. அப்போது அனைத்து விளக்குகளையும் ஒளிர செய்து  சைரன் ஒலிக்கப்படுகிறது.

கோவாவில் கடற்படை விமான நிலையத்தில் இன்று இரவு பங்கேற்கும் மனித சங்கிலி நடத்தப்படுகிறது. விசாகப்பட்டினம் கடலில் 2 கப்பல்களில் டாக்டர்கள், நர்சுகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »