பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவில் அங்கு ஒரு நாளில் மட்டும் 1,297 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.
இஸ்லாமாபாத்:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா, பாகிஸ்தானில் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது. இந்தநிலையில் அங்கு திடீரென கொரோனா பரவும் வேகம் அதிகரித்து இருக்கிறது. அதன்படி இதுவரை இல்லாத அளவில் அங்கு ஒரு நாளில் மட்டும் 1,297 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துவிட்டது.
இந்த நிலையில் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரஷிய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் விரைவில் குணமடைந்து திரும்ப விரும்புவதாகவும், தொற்றுநோய்க்கு எதிராக போராடுவதில் நட்பு நாடான ரஷியாவுடன் சேர்ந்து இருப்பதாகவும்” குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar