Press "Enter" to skip to content

இந்தியாவில் 40 ஆயிரத்தை கடந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவியவர்களின் எண்ணிக்கை – அப்டேட்ஸ்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

நேற்றைய நிலவரப்படி, 37 ஆயிரத்து 776 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 26 ஆயிரத்து 535 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். 

வைரஸ் தாக்குதலுக்கு ஆயிரத்து 223 பேர் உயிரிழந்தனர். ஆனாலும், கொரோனாவில் இருந்து ஆயிரத்து 18 பேர் குணமடைந்திருந்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் இன்றைய நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 40 ஆயிரத்து 263 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 487 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. கொரோனா பரவியவர்களில் 28 ஆயிரத்து 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு நாடு முழுவதும் இதுவரை பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனாவில் இருந்து இதுவரை 10 ஆயிரத்து 886 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »