Press "Enter" to skip to content

கொரோனாவில் இருந்து முற்றிலும் மீண்ட 4 மாவட்டங்கள்

தமிழகத்தில் 4 மாவட்டங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முற்றிலும் மீண்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. இதனால் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 550 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 409 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 4 மாவட்டங்கள் கொரோனாவில் இருந்து முற்றிலும் மீண்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்ட மாவட்டங்கள்:

ஈரோடு

ஈரோட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 70 பேரில் 69 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு ஒருவர் உயிரிழந்தார். மேலும், அங்கு புதிகாக யாருக்கும் கொரோனா பரவவில்லை. இதனால் ஈரோடு வைரஸ் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பரவவில்லை. இதனால் அது வைரஸ் பாதிக்கப்படாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவியிருந்த 9 பேரும் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நீலகிரி கொரோனா இல்லாத மாவட்டமாக உருவெடுத்துள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 27 பேருக்கு வைரஸ் பரவியிருந்தது. கொரோனா பரவியவர்களில் 26 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய ஒரு நபர் வைரசுக்கு உயிரிழந்துவிட்டார். 

மேலும், அங்கு கடந்த சில நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பரவவில்லை. இதனால் கொரோனாவை வீழ்த்தி தூத்துக்குடி வெற்றி பெற்றுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »