Press "Enter" to skip to content

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14541 ஆக உயர்வு

மகாராஷ்டிராவில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14,541 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ்

மகாராஷ்டிராவில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14,541 ஆக அதிகரித்துள்ளது.

மும்பை:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 14,541 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 583 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் கொரோனாவால் 771 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் 35 பேர் பலியாகி உள்ளனர் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »