மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 53 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கு கொரோனாவால் பலியாஅனோர் எண்ணிக்கை 921 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை:
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 1026 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 24,427 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் கொரோனாவால் 1,026 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் 53 பேர் பலியாகி உள்ளனர் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar