தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது. மாவட்ட வாரியாக முழு விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 509 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 227 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் (சென்னை) வந்தவர்களில் நேற்று வரை 4 பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு விமான நிலைய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்றும் வெளிநாட்டில் இருந்து தமிழகம் (சென்னை) வந்த மேலும் 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டு விமான நிலைய தனிமைபடுத்தலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலம் முழுவதும் கொரோனாவால் பரவியவர்களில் 6 ஆயிரத்து 984 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 176 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-
அரியலூர் – 348
செங்கல்பட்டு – 416
சென்னை – 5,262
கோவை – 146
கடலூர் – 413
தர்மபுரி – 5
திண்டுக்கல் – 111
ஈரோடு – 70
கள்ளக்குறிச்சி – 61
காஞ்சிபுரம் – 160
கன்னியாகுமரி – 26
கரூர் – 54
கிருஷ்ணகிரி – 20
மதுரை – 123
நாகை – 47
நாமக்கல் – 77
நீலகிரி – 14
பெரம்பலூர் – 133
புதுக்கோட்டை – 6
ராமநாதபுரம் – 30
ராணிப்பேட்டை – 76
சேலம் – 35
சிவகங்கை – 12
தென்காசி – 53
தஞ்சாவூர் – 70
தேனி – 71
திருப்பத்தூர் – 28
திருவள்ளூர் – 492
திருவண்ணாமலை – 128
திருவாரூர் – 32
தூத்துக்குடி – 36
திருநெல்வேலி – 98
திருப்பூர் – 114
திருச்சி – 67
வேலூர் – 34
விழுப்புரம் – 306
விருதுநகர் – 44
விமான நிலைய தனிமைப்படுத்தல் – 9
மொத்தம் – 9,227
Related Tags :
Source: Maalaimalar