Press "Enter" to skip to content

வேளாண்துறை உள்கட்டமைப்புகளுக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு

வேளாண்துறை உள்கட்டமைப்புகளை ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதிமந்திரி நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பெயரில் பல கட்டங்களாக நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

தன்னிறைவு இந்தியா திட்டத்தின் மூன்றாம் கட்ட அறிவிப்பில் நிதி மந்திரி தெரிவித்ததாவது:-

விவசாயிகளிடம் இருந்து நேரடிக் கொள்முதல் செய்வதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

கொள்முதல் நிலைய உள்கட்டமைப்பு, குளிர்பதன கிடங்கு உள்பட பல்வேறு விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புகளை மேம்படுத்த இந்த நிதி செலவிடப்படும்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »