தேனீ வளர்ப்பு மற்றும் தேன் உற்பத்தியை ஊக்குவிக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20
லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பெயரில்
பல கட்டங்களாக நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார்.
தன்னிறைவு இந்தியா திட்டத்தின் மூன்றாம் கட்ட அறிவிப்பில் நிதி மந்திரி தெரிவித்ததாவது:-
தேனீ வளர்ப்பு மற்றும் தேன் உற்பத்தியை ஊக்குவிக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீன்பிடி உள்கட்டமைப்புகளுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Source: Maalaimalar