பாகிஸ்தானில் கொரோனா வைரசுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இஸ்லாமாபாத்:
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு 37,218 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 803 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10 ஆயிரத்து 155 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கிடையே, பாகிஸ்தானில் இன்று உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar