Press "Enter" to skip to content

உறுப்பினர் அல்லாத முடித் திருத்தகம் கடைக்காரர்களுக்கும் ரூ.2000 நிவாரணம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நலவாரியத்தில் பதிவு செய்யாத முடி திருத்துவோருக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முடி திருத்துவோர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு ஏற்கனவே இரு தவணைகளாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.

முடி திருத்துவோர் நலவாரிய உறுப்பினர்களுக்கு தந்தது போல் நலவாரியத்தில் பதிவு செய்யாத முடி திருத்துவோருக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »