Press "Enter" to skip to content

ஒரே நாளில் சுமார் ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீட்பு – நம்பிக்கை அளிக்கும் தமிழகம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 939 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் இன்று 477 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 384 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள். எஞ்சிய 93 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் ஆகும்.

இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டோரில் 6 ஆயிரத்து 970 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பரவியவர்களில் பலர் குணமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் சுமார் ஆயிரம் (939) பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது தமிழக மக்களிடையே நம்பிக்கையை அளித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »