தமிழகத்தில் 3 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் இருந்த நிலையில், இன்று புதிதாக 639 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
இந்தியாவையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவி வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 10 ஆயிரத்து 585 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. கொரோனா பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 74 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டார்.
அந்த தகவலின்படி, தமிழகத்தில் 3 நாட்களுக்கு பின் கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் இருந்த நிலையில் மாநிலத்தில் இன்று புதிதாக 639 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 172 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar