Press "Enter" to skip to content

ரிமேலாய்வுஷன் கவுண்டர்களில் நாளை முதல் முன்பதிவு செய்யலாம் -தொடர்வண்டித் துறை அறிவிப்பு

ரெயில் நிலையங்களில் உள்ள ரிசர்வேஷன் கவுண்டர்களில் நாளை முதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரெயில்வே அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் 25-ந்தேதியில் இருந்து பயணிகள் ரெயில் சேவையை இந்திய ரெயில்வே நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 12-ந்தேதியில் இருந்து சிறப்பு ரெயில்களை மட்டும் இயக்கி வருகிறது. இந்தியாவில் 4-வது கட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.

ஜூன் 1-ம் தேதியில் இருந்து ஏ.சி. அல்லாத 200 ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் நேற்று முன்தினம் அறிவித்தார். 

இதற்கிடையே,  ஜூன் 1-ம் தேதி இயக்கப்பட உள்ள 200 ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 

இந்நிலையில், ரெயில் நிலையங்களில் உள்ள ரிசர்வேஷன் கவுண்டர்களில் நாளை முதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரெயில்வே அறிவித்துள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »