Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 7 ஆயிரத்து 900 பேர் – மாவட்ட வாரியாக விவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 7 ஆயிரத்து 915 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரங்களை காண்போம்.

சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 512 ஆக அதிகரித்துள்ளது.  

இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களும் உள்ளடக்கம். வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் சிலர் விமான நிலையத்திலும், ரெயில் நிலையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 915 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 7 ஆயிரத்து 491 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரி விவரம்:- 

அரியலூர் – 7

செங்கல்பட்டு – 481

சென்னை – 5,865

கடலூர் – 15

திண்டுக்கல் – 26

ஈரோடு – 1

கள்ளக்குறிச்சி – 60

காஞ்சிபுரம் – 108

கன்னியாகுமரி – 21

கரூர் – 25

கிருஷ்ணகிரி – 3

மதுரை – 111

நாகப்பட்டினம் – 3

நீலகிரி – 1

பெரம்பலூர் – 5

புதுக்கோட்டை – 12

ராமநாதபுரம் – 25

ராணிப்பேட்டை – 29

சேலம் – 17

சிவகங்கை – 3

தென்காசி – 33

தஞ்சாவூர் – 14

தேனி – 50

திருப்பத்தூர் – 4

திருவள்ளூர் – 426

திருவண்ணாமலை – 103

திருவாரூர் – 3

தூத்துக்குடி – 111

திருநெல்வேலி – 187

திருச்சி – 6

வேலூர் – 5

விழுப்புரம் – 24

விருதுநகர் – 53

விமானநிலைய தனிமைப்படுத்தல் – 74

ரெயில் நிலைய தனிமைப்படுத்தல் – 5

மொத்தம் – 7,915

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »