தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 1-ந்தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறிய அரசு, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தது.
நேற்று 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 512 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 16277 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar