Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு பிரேசிலில் ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி ஒரே நாளில் மீண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

ரியோ டி ஜெனிரோ:

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு, ஒரே நாளில் 15 ஆயிரத்து 691 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதேபோல், பிரேசிலில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 24 ஆயிரத்து 500-ஐ தாண்டியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »