Press "Enter" to skip to content

சமூக அநீதியை கண்டிக்கிறேன் – மு.க.ஸ்டாலின்

இந்தச் சமூக அநீதியைக் கண்டிக்கிறேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது:

இந்தச் சமூக அநீதியைக் கண்டிக்கிறேன். பல் மருத்துவம் மற்றும் மருத்துவப் படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான நீட் இட ஒதுக்கீட்டில் – பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இடங்களை மத்திய அரசு தடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 11,000 இடங்களை அவர்கள் இழந்துள்ளனர்.

அரசியல் சட்டத்தின் உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பாதுகாத்திட வேண்டும் என மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »