Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பு பணி- மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் இன்று ஆலோசனை

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,495 ஆக  அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15,776 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »