Press "Enter" to skip to content

பிரேசிலை மிரட்டும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது

பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

ரியோ டி ஜெனிரோ:

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரேசிலில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது. நேற்று ஒரே நாளில் 22 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரேசிலில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 400-ஐ தாண்டியது.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »