Press "Enter" to skip to content

மத்திய அரசின் முடிவு சமூக நீதிக்கு எதிரானது- நாராயணசாமி

மருத்துவ படிப்புகளில் உரிய இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்காதது சமூக நீதிக்கு எதிரானது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார்.

புதுச்சேரி:

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் தரும் இடங்களில் ஓபிசிக்கு 50 சதவீதம் கோரி நீதிமன்றம் செல்வோம் என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறி உள்ளார்.

உரிய இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்காதது சமூக நீதிக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு குடும்பத்திலும் 5 கிலோ அரிசி வழங்கியதை தவிர மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் தவறான நடவடிக்கையால் புதுச்சேரியின் பொருளாதாரம் பாதிப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர்  நாராயணசாமி கூறி உள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »