Press "Enter" to skip to content

தமிழகத்தில் இன்று 1,875 பேருக்கு கொரோனா தொற்று: 23 பேர் பலி- 1372 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று 1875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 11 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் இன்றும் ஆயிரத்தை தாண்டி 1,875 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 38,716 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 23 பேர் (தனியார் மருத்துவனையில் இருவர் உள்பட) உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 349 ஆக உயர்ந்துள்ளது.

இன்று அதிகபட்சமாக 1,372 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,705 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 16,829 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் இதுவரை 6,55,675 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

15,456 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் மொத்தம் 6,25,312 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »