ஆந்திர சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் 16-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமராவதி:
ஆந்திர மாநில சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் மாதம் 16-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, ஆந்திர சட்டசபை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆந்திர சட்டசபையின் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் மாதம் 16-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஆளுநர் பி.பி. ஹரிசந்தன் கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அதன்பின், 2020- 21-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar