Press "Enter" to skip to content

கேரளாவில் மேலும் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் மேலும் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்:

வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்களால் கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் புதிதாக மேலும் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் மேலும் 78 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2332 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 36 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 31 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கேரளத்தில் 1303 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »