Press "Enter" to skip to content

கொரோனாவின் கோரப்பிடியில் பிரேசில் – பாதிப்பு எண்ணிக்கை 8.5 லட்சத்தை கடந்தது

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.5 லட்சத்தைக் கடந்துள்ளது.

ரியோ டி ஜெனிரோ:

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.5 லட்சத்தைக் கடந்துள்ளது.

பிரேசிலில் கடந்த சில நாட்களாக 25 முதல் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை நெருங்குகிறது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »