Press "Enter" to skip to content

ஒரு நாளில் 1,358 பேர் டிஸ்சார்ஜ் – மாவட்ட வாரியாக முழு விவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 1,358 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மாநிலத்தில் வைரசில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 710 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது.  

இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் நேற்று ஒரே நாளில் கொரோனா பரவியவர்களில் 1,358 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-

அரியலூர் – 387

செங்கல்பட்டு – 1,968

சென்னை – 23,756

கோவை – 164

கடலூர் – 492

தர்மபுரி – 17

திண்டுக்கல் – 213

ஈரோடு – 72

கள்ளக்குறிச்சி – 301

காஞ்சிபுரம் – 600

கன்னியாகுமரி – 99

கரூர் – 86

கிருஷ்ணகிரி – 32 

மதுரை – 389

நாகை – 67

நாமக்கல் – 85

நீலகிரி – 14

பெரம்பலூர் – 144

புதுக்கோட்டை – 36

ராமநாதபுரம் – 131

ராணிப்பேட்டை – 291

சேலம் – 204

சிவகங்கை – 53

தென்காசி – 108

தஞ்சாவூர் – 130

தேனி – 129

திருப்பத்தூர் – 40

திருவள்ளூர் – 1,427

திருவண்ணாமலை – 465

திருவாரூர் – 105

தூத்துக்குடி – 391

திருநெல்வேலி – 428

திருப்பூர் – 116

திருச்சி – 162

வேலூர் – 111

விழுப்புரம் – 391

விருதுநகர் – 139

விமானநிலைய கண்காணிப்பு 

வெளிநாடு – 119

உள்நாடு – 59

ரெயில் நிலைய கண்காணிப்பு – 191

மொத்தம் – 34,112

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »