தமிழகத்தில் நேற்று 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 2 ஆயிரத்து 478 பேர். விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 10 நபர், உள்நாட்டில் இருந்து வந்தவர்கள் 4 பேர் ஆவர்.
மேலும், ரெயில் மற்றும் சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்களில் 24 பேர் ஆகும்.
இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 28 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 33 ஆயிரத்து 339 பேர் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 833 பேர் உயிரிழந்துள்ளனர்.
உள்மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
செங்கல்பட்டு – 146
சென்னை – 1,380
கோவை – 12
கடலூர் – 28
தர்மபுரி – 9
திண்டுக்கல் – 44
ஈரோடு – 5
கள்ளக்குறிச்சி – 37
காஞ்சிபுரம் – 59
கன்னியாகுமரி – 9
கரூர் – 3
கிருஷ்ணகிரி – 3
மதுரை – 137
நாகை – 2
நாமக்கல் – 1
நீலகிரி – 15
பெரம்பலூர் – 12
புதுக்கோட்டை – 2
ராமநாதபுரம் – 18
ராணிப்பேட்டை – 29
சேலம் – 7
சிவகங்கை – 19
தென்காசி – 11
தஞ்சாவூர் – 13
தேனி – 48
திருப்பத்தூர் – 1
திருவள்ளூர் – 156
திருவண்ணாமலை – 110
திருவாரூர் – 10
தூத்துக்குடி – 38
திருநெல்வேலி – 3
திருச்சி – 40
வேலூர் – 36
விழுப்புரம் – 9
விருதுநகர் – 26
மொத்தம் – 2,478
வெளிமாநிலங்கள்வெளிநாடுகளில் இருந்து சாலை, விமானம் மூலமாக சொந்த ஊர் வந்தவர்கள்:-
கடலூர் வந்தவர்கள் – 1 நபர்
தருமபுரி வந்தவர்கள் – 2 பேர்
கள்ளக்குறிச்சி வந்தவர்கள் – 6 பேர்
நீலகிரி வந்தவர்கள் – 2 பேர்
ராமநாதபுரம் வந்தவர்கள் – 4 பேர்
சிவகங்கை வந்தவர்கள் – 1 நபர்
தஞ்சாவூர் வந்தவர்கள் – 1 நபர்
திருவண்ணாமலை வந்தவர்கள் – 4 பேர்
திருநெல்வேலி வந்தவர்கள் – 2 பேர்
திருச்சி வந்தவர்கள் – 1 நபர்
மொத்தம் – 24
விமான நிலைய கண்காணிப்பு
உள்நாடு – 10 பேர்
வெளிநாடு – 4 பேர்
மொத்தம் – 14
இந்த விவரங்களின் அடிப்படையில் (2,478+24+14) தமிழகத்தில் நேற்று புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,516 ஆக உள்ளது.
Related Tags :
Source: Maalaimalar