பாகிஸ்தானில் ஒரே நாளில் 59 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது.
இஸ்லாமாபாத்:
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.95 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,95,745 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அங்கு கொரோனாவால் ஒரே நாளில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 3,962 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஜெர்மனி, துருக்கியை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் 12 வது இடத்தில் உள்ளது.
Related Tags :
Source: Maalaimalar