Press "Enter" to skip to content

ஒரு நாளில் 2 ஆயிரத்து 737 பேர் டிஸ்சார்ஜ் – மாவட்ட வாரியாக குணமடைந்தோர் எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 737 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மாநிலத்தில் வைரசில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 713 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.  

இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 33 ஆயிரத்து 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,025 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் இன்று ஒரே நாளில் கொரோனா பரவியவர்களில் 2,737 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 94 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-

அரியலூர் – 394

செங்கல்பட்டு – 2,589

சென்னை – 31,045

கோவை – 177

கடலூர் – 557

தர்மபுரி – 19

திண்டுக்கல் – 231

ஈரோடு – 74

கள்ளக்குறிச்சி – 346

காஞ்சிபுரம் – 755

கன்னியாகுமரி – 128

கரூர் – 100

கிருஷ்ணகிரி – 32 

மதுரை – 548

நாகை – 82

நாமக்கல் – 86

நீலகிரி – 22

பெரம்பலூர் – 146

புதுக்கோட்டை – 42

ராமநாதபுரம் – 176

ராணிப்பேட்டை – 363

சேலம் – 238

சிவகங்கை – 61

தென்காசி – 111

தஞ்சாவூர் – 169

தேனி – 147

திருப்பத்தூர் – 45

திருவள்ளூர் – 2,031

திருவண்ணாமலை – 616

திருவாரூர் – 139

தூத்துக்குடி – 536

திருநெல்வேலி – 513

திருப்பூர் – 117

திருச்சி – 199

வேலூர் – 193

விழுப்புரம் – 452

விருதுநகர் – 170

விமானநிலைய கண்காணிப்பு 

வெளிநாடு – 151

உள்நாடு – 75

ரெயில் நிலைய கண்காணிப்பு – 219

மொத்தம் – 44,094

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »