தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 737 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மாநிலத்தில் வைரசில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 713 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.
இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 33 ஆயிரத்து 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,025 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் இன்று ஒரே நாளில் கொரோனா பரவியவர்களில் 2,737 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 94 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-
அரியலூர் – 394
செங்கல்பட்டு – 2,589
சென்னை – 31,045
கோவை – 177
கடலூர் – 557
தர்மபுரி – 19
திண்டுக்கல் – 231
ஈரோடு – 74
கள்ளக்குறிச்சி – 346
காஞ்சிபுரம் – 755
கன்னியாகுமரி – 128
கரூர் – 100
கிருஷ்ணகிரி – 32
மதுரை – 548
நாகை – 82
நாமக்கல் – 86
நீலகிரி – 22
பெரம்பலூர் – 146
புதுக்கோட்டை – 42
ராமநாதபுரம் – 176
ராணிப்பேட்டை – 363
சேலம் – 238
சிவகங்கை – 61
தென்காசி – 111
தஞ்சாவூர் – 169
தேனி – 147
திருப்பத்தூர் – 45
திருவள்ளூர் – 2,031
திருவண்ணாமலை – 616
திருவாரூர் – 139
தூத்துக்குடி – 536
திருநெல்வேலி – 513
திருப்பூர் – 117
திருச்சி – 199
வேலூர் – 193
விழுப்புரம் – 452
விருதுநகர் – 170
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 151
உள்நாடு – 75
ரெயில் நிலைய கண்காணிப்பு – 219
மொத்தம் – 44,094
Related Tags :
Source: Maalaimalar