உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றைக் கடந்தபோது தவறி விழுந்த எம்எல்ஏவை உடனிருந்தவர்கள் விரைந்து மீட்டு கரைசேர்த்தனர்.
பிதோராகர்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள், சிறிய பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிதோராகர் மாவட்டம் தார்சுலா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஷ் தாமி நேற்று தனது ஆதரவாளர்களுடன் அப்பகுதியில் உள்ள சிறிய ஆற்றை கடந்து சென்றார்.
#WATCH Uttarakhand: Congress MLA Harish Dhami had a narrow escape after he slipped while crossing a flooded rivulet in Dharchula area of Pithoragarh. He was rescued by party workers & supporters accompanying him. (30.07.2020) pic.twitter.com/9pZDHSd30T
— ANI (@ANI)
காட்டாற்று வெள்ளம் ஓடிக்கொண்டிருந்த அந்த ஆற்றில் இறங்கி மெதுவாக நடந்துகொண்டிருந்தபோது, திடீரென எம்எல்ஏ ஹரிஷ் தாமி நிலைதடுமாறி ஆற்றில் விழுந்தார். அவரை வெள்ளம் இழுத்துச் சென்றது.
அப்போது, உடனிருந்த ஆதரவாளர்கள் துரிதமாக செயல்பட்டு அவரை மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Source: Maalaimalar