Press "Enter" to skip to content

வயநாட்டுக்கு 19-ம் தேதி ராகுல் காந்தி வருகை

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 19-ம் தேதி வயநாடு செல்கிறார்.

திருவனந்தபுரம்:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யாக இருக்கும் ராகுல்காந்தி தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு அடிக்கடி வயநாடு சென்று தொகுதி மக்களைச் சந்தித்து வருகிறார்.

கேரளாவில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போதும் வயநாடு சென்று 4 நாட்கள் தங்கியிருந்து நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டார்.

இந்நிலையில், வயநாடு தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வரும் 19-ம் தேதி முதல் இரு தினங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »