Press "Enter" to skip to content

டெல்லியில் மேலும் 3,259 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லியில் இன்று மேலும் 3,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக சற்று குறைந்தே வருகிறது.
 
இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 3,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,27,718 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 35 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,981 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,98,853 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 22,884 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »