பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காரணமாக அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.
லண்டன்:
கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் 4 கோடியை நெருங்க உள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியை நெருங்குகிறது. 11 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் 11வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காரணமாக அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 500- ஐ கடந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar