Press "Enter" to skip to content

ரூ.15 கோடி மதிப்பிலான கைபேசிகள் கொள்ளை- தனிப்படை காவல் துறையினர் ம.பி. விரைவு

சூளகிரி அருகே கன்டெய்னர் பார வண்டியை கடத்திச்சென்று ரூ.15 கோடி மதிப்பிலான கைபேசிகளை கொள்ளையடித்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை காவல் துறையினர் மத்திய பிரதேசம் விரைந்தனர்.

ஓசூர்:

சென்னை பூந்தமல்லியில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு நேற்று முன்தினம் மதியம் 15 அட்டை பெட்டிகளில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான மொத்தம் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் நிறுவன கைபேசிகளை ஏற்றி கொண்டு கன்டெய்னர் பார வண்டி ஒன்று புறப்பட்டது. இந்த பார வண்டியை பூந்தமல்லியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 29) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக கோவையை சேர்ந்த அருண் (26) என்பவர் உடன் வந்தார்.

இந்த கன்டெய்னர் பார வண்டி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் மற்றொரு பார வண்டியில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் கன்டெய்னர் பார வண்டியை திடீரென வழிமறித்தது. தொடர்ந்து அந்த கும்பல், டிரைவர்கள் சதீஷ்குமார், அருண் ஆகியோரை ஆயுதங்களால் தாக்கியது. பின்னர் அவர்களது கை, கால்களை கட்டி சாலையோர புதரில் போட்டு விட்டு கன்டெய்னர் பார வண்டியை கடத்தி சென்றது.

இந்த நிலையில் புதரில் கிடந்த டிரைவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டனர். இதையடுத்து டிரைவர்கள் 2 பேரும் சூளகிரி காவல் துறை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் விரைந்து வந்து டிரைவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, கன்டெய்னர் பார வண்டியில் 15 பெட்டிகளில், 14,576 கைபேசிகள் இருந்ததாகவும், இவற்றின் மதிப்பு சுமார் ரூ.15 கோடி என்பதும், 10 பேர் கொண்ட மர்ம கும்பல் கன்டெய்னர் பார வண்டியை வழிமறித்து கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து டிரைவர்கள் 2 பேரையும் காவல் துறையினர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கைபேசிகளுடன் கடத்தப்பட்ட கன்டெய்னர் பார வண்டி, சூளகிரியை அடுத்த அழகுபாவி தேசிய நெடுஞ்சாலையோரம் நிற்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது பார வண்டியில் கைபேசிகள் எதுவும் இல்லை என்பதும், அந்த கும்பல் அவற்றை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், மாவட்ட காவல் துறை சூப்பிரண்டு பண்டி கங்காதர் மற்றும் ஓசூர் துணை காவல் துறை சூப்பிரண்டு முரளி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை ஆய்வு செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க, துணை காவல் துறை சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை காவல் துறையினர் கொள்ளையர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விசாரணையில் ரூ.15 கோடி மதிப்பிலான கைபேசிகளுடன் சென்ற கன்டெய்னர் பார வண்டியை சென்னையில் இருந்தே ஒரு பார வண்டி பின் தொடர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

பின்தொடர்ந்து வந்த பார வண்டி போலியான பதிவு எண் கொண்டது என்பதும்,  போலி பதிவு எண் கொண்ட பார வண்டி மத்திய பிரதேசத்தில் ஓடுவதாகவும் தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து 9 தனிப்படை காவல் துறையினர் கைபேசிகளை கொள்ளை அடித்தவர்களை பிடிக்க மத்திய பிரதேசம் விரைந்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »