Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் – ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட விவாதம் தொடங்கியது

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். 

அதேபோல், துணை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான மைக் பென்சை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

அமெரிக்க தேர்தலை பொறுத்தவரை அதிபர், துணை அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்தித்து நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகவும் பிரபலமான தேர்தல் பிரசார நடைமுறை ஆகும்.

அந்த வகையில் அதிபர் வேட்பாளர்களான டொனால்டு டிரம்ப், ஜோ பிடனுக்கு இடையே கடந்த மாதம் 29-ம் தேதி ஓஹியோ மாகாணத்தில் முதல் நேரடி விவாதம் நடந்தது.

அதிபர் வேட்பாளர்களின் 2-வது நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி கடந்த 15-ம் தேதி புளோரிடா மாகாணத்தில்  காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான இறுதிக்கட்ட விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இத்தேர்தலில் முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »