Press "Enter" to skip to content

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து மொத்தம் 4 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் 3 கோடி ருபாய் மதிப்பிலான ஹெராயின் என்ற போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், மத்திய பிரதேசம் மாநிலத்தின் இந்தூர் நகரில் சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய சோதனையில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருளை கைப்பற்றி உள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

வடமாநிலங்களில் அடுத்தடுத்து ஒரே நாளில் மொத்தம் 4 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »