Press "Enter" to skip to content

மிளகு ரசம், பூண்டு ரசம் சாப்பிட்டால் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஓடி ஒழிந்துவிடும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மிளகு ரசம், பூண்டு ரசம் சாப்பிட்டால் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஓடி ஒழிந்துவிடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி பகுதியில் தமிழக அரசின் அம்மா சின்ன (மினி) கிளினிக்கை பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

இப்போது அம்மா சின்ன (மினி) கிளினிக் அமைந்திருக்கும் பகுதியான மல்லி, டில்லிக்கு இணையான பகுதி.

மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்து ஒரு கிளாஸ் குடித்தால் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஓடி ஒழிந்துவிடும்.

சுக்கு, மிளகு உள்ளிட்டவற்றை நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »