Press "Enter" to skip to content

அதிரும் அமெரிக்கா – ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி

அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3.89 லட்சத்தைத் தாண்டியது.

வாஷிங்டன்:

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகமெங்கும் அடுத்தடுத்து பரவி அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

உலக அளவில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2.33 கோடியை தாண்டியுள்ளது. 

கொரோனா வைரசால் ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3.89 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.37 கோடியைத் தாண்டியுள்ளது. 91 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »