Press "Enter" to skip to content

எல்லையில் சீனப்படைகள் அத்துமீறினால் பதிலடி தருவோம் – விமான படை தளபதி

எல்லையில் சீனப்படைகள் அத்துமீறினால் பதிலடி தரப்படும் என இந்திய விமான படைத்தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா கூறியுள்ளார்.

புதுடெல்லி:

கிழக்கு லடாக்கில் அமைந்த அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய மற்றும் சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே, ராஜஸ்தானின் ஜோத்பூரில் கடந்த புதன்கிழமை டெசர்ட் நைட்-21 என்ற பெயரில் இந்திய விமான படையின் மெகா பயிற்சி தொடங்கியது.

தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்தடைந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரபேல் போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்திய விமான படையின் தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், இந்தியாவுக்கு 8 ரபேல் விமானங்கள் வந்து சேர்ந்துவிட்டன. ஜனவரி இறுதிக்குள் மேலும் 3 விமானங்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விமான படையில் ரபேல் விமானங்களை சேர்க்கும் பணி வரும் 2023-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றார்.

கிழக்கு லடாக்கில் சீனப்படைகள் அத்துமீறக் கூடிய வாய்ப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எல்லையில் சீனப்படைகள் அத்துமீறினால் நாமும் பதிலடி கொடுப்போம் என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »