Press "Enter" to skip to content

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,635 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,635 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மட்டுமே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. மற்ற மாநிலங்களில் வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 8635 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 13,423 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 1,07,66,245 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,04,48,406 பேர் குணமடைந்துள்ளனர். 1,54,486 பேர் உயிரிழந்துள்ளனர். 1,63,353 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

39,50,156 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »