Press "Enter" to skip to content

விவசாயிகளை தூண்டி விடும் 250 டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

விவசாயிகளை தூண்டி விடும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் பதிவுகளை வெளியிட்ட 250 டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன.

புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தின.

அதேபோன்ற வன்முறை சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க எல்லைப் பகுதியில் அதிக அளவில் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை தூண்டி விடும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் பதிவுகளை வெளியிட்ட 250 டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. அந்த பதிவுகளையும் டுவிட்டர் நிர்வாகம் நீக்கியது. போலி செய்திகளை பரப்பி வன்முறையை தூண்டும் டுவிட்டர் கணக்களும் முடக்கப்பட்டன.

மத்திய உள்துறை அமைச்சகம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கையை டுவிட்டர் நிறுவனம் எடுத்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »