Press "Enter" to skip to content

சென்னை-மதுரை தேஜஸ் தொடர் வண்டி ஏப்ரல் 4 முதல் திண்டுக்கல் தொடர் வண்டி நிலையத்தில் நின்று செல்லும்

சென்னை – மதுரை தேஜஸ் தொடர் வண்டி ஏப்ரல் 4-ம் தேதி முதல் திண்டுக்கல் தொடர் வண்டி நிலையத்தில் நின்று செல்லும் என்றுதொடர்வண்டித் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை:

சென்னை- மதுரை எழும்பூர் இடையே சென்றுவரும் தேஜஸ் தொடர் வண்டி மதுரையில் புறப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு தொடர் வண்டிநிலையத்தில் மட்டும் நின்று சென்றது. 

திண்டுக்கல் தொடர் வண்டி நிலையத்தில் நின்று செல்லாததால் திண்டுக்கல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் தேஜஸ் ரெயிலில் சென்னைக்குப் பயணிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் திண்டுக்கல் தொடர் வண்டி நிலையத்தில் தேஜஸ் தொடர் வண்டி நின்றுசெல்ல வேண்டும் என வர்த்தகர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், திண்டுக்கல் தொடர் வண்டி நிலையத்தில் மதுரை- சென்னை தேஜஸ் தொடர் வண்டி ஏப்ரல் 4-ம் தேதி முதல் நின்று செல்லும் எனதொடர்வண்டித் துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »