நண்பர்களுக்காக வாழ்பவர். பெரு முதலாளிகளின் நண்பரான மோடி நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி மாநிலங்களவையில் பேசுகையில், ‘‘போராட்டம் நடத்துவதற்கென ஒரு புதிய சமூகம் உருவாகி இருக்கிறது. போராட்டத்துக்காகவே அவர்கள் வாழ்கிறார்கள்’’ என்று கூறினார்.
இந்தநிலையில், அவருக்கு பதிலடி தருவதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ஒரு பதிவு வெளியிட்டார்.
‘பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் விற்பனை’ என்ற தலைப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
நண்பர்களுக்காக வாழ்பவர். பெரு முதலாளிகளின் நண்பரான அவர், நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar