Press "Enter" to skip to content

தொழுகை நேரத்தில் பிரசாரத்தை நிறுத்திய எடப்பாடி பழனிசாமி- பொதுமக்கள் பாராட்டு

திருப்பத்தூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழுகை நேரத்தில் தனது பேச்சை நிறுத்தினார். இதற்கு பொதுமக்கள் பாராட்டி கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

திருப்பத்தூர்:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருப்பத்தூரில் நேற்று பகல் மக்கள் கூட்டத்தின் நடுவே எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது அருகேயுள்ள மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை மேற்கொண்டனர். இந்த தொழுகை மேற்கொள்ளும் சத்தம் ஒலிபெருக்கியில் கேட்டவுடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக தனது பேச்சை நிறுத்தினார். தொடர்ந்து தொழுகை முடியும் வரை அவர் பேசாமல் அமைதி காத்தார். தொழுகை முடிந்தவுடன் அவர் தனது பேச்சை தொடர்ந்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »