Press "Enter" to skip to content

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை – புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

சென்னை மெட்ரோ தொடர் வண்டி விரிவாக்க திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.

சென்னை:

பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் அரசுமுறை பயணமாக இன்று காலை 10.35 மணியளவில் சென்னை வருகிறார்.

அவர், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

நிகழ்ச்சியில் அவர், சென்னை வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே ரூ.3,770 கோடி செலவில் சென்னை மெட்ரோ தொடர் வண்டி முதல்கட்ட விரிவாக்க திட்டம், ரூ.293.40 கோடி செலவில், சென்னை கடற்கரை-அத்திபட்டு இடையே 21.1 கி.மீ. நீளமுள்ள 4-வது தொடர் வண்டி பாதை இணைப்பு, ரூ.423 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம்-கடலூர், மயிலாடுதுறை-தஞ்சை மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் இடையே 228 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்டு உள்ள ஒருவழி தொடர் வண்டி பாதை ஆகிய முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

ரூ.2,640 கோடி செலவில் கல்லணை கால்வாய் விரிவாக்கம், புதுப்பிப்பு மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்துக்கும், சென்னை தையூரில் ரூ.1,000 கோடி செலவில் ஐ.ஐ.டி.க்காக அமைக்கப்பட உள்ள ‘டிஸ்கவரி கேம்பஸ்’ வளாகம் அமைப்பதற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னை ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் போர் பீரங்கியை இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மத்திய-மாநில அரசின் உயரதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 7.50 மணிக்கு புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு காலை 10.35 மணிக்கு வந்து சேருகிறார். அங்கிருந்து காலை 10.40 மணியளவில் ‘உலங்கூர்தியில் புறப்பட்டு, சென்னை நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு காலை 11 மணிக்கு வருகிறார்.

பின்னர் அவர் அங்கிருந்து காலை 11.05 மணியளவில் தேர் மூலம் புறப்பட்டு சாலைமார்க்கமாக தீவுத்திடல், கொடிமரச்சாலை, முத்துசாமி பாலம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்டிரல், ரிப்பன் மாளிகை வழியாக சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு காலை 11.15 மணிக்கு வருகிறார். பிரதமர் வரும் வழியில் அவருக்கு 5 இடங்களில் பா.ஜ.க., அ.தி.மு.க. சார்பில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில், காலை 11.15 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பிரதமரின் நிகழ்ச்சி நிரல் அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி மதியம் 12.50 மணி வரை அங்கு இருக்கிறார். அப்போது அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட முக்கிய பிரமுகர்கள் தனியாக சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது. இந்த சந்திப்பின்போது தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு போன்ற அரசியல்ரீதியான பேச்சுவார்த்தைகள் இருக்கும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

முக்கிய பிரமுகர்களுடனான சந்திப்பு முடிந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி மதியம் 12.55 மணியளவில், சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இருந்து தேர் மூலம் புறப்பட்டு சாலை மார்க்கமாக, வந்த வழியாகவே ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு மதியம் 1.05 மணிக்கு செல்கிறார். அங்கிருந்து உலங்கூர்தியில் மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, சென்னை விமான நிலையத்தை மதியம் 1.30 மணியளவில் சென்றடைகிறார்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து மதியம் 1.35 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு கொச்சி ஐ.என்.எஸ். கருடா கடற்படை தளத்தில் உள்ள விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணிக்கு சென்றடைகிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நகர் முழுவதும் நேற்று இரவு முதல் அதிகாலை வரை காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பிரதமர் செல்லும் பாதையில் காவல் துறையினர் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தினார்கள். விழா நடைபெறும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் காவல் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை காவல் துறை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரடி மேற்பார்வையில் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், ஆய்வாளர்கள், துணைஆய்வாளர்கள் என10 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மோடி வருகையையொட்டி இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல் துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை எல்லைக்குள் வர அனுமதி இல்லை.

* கோயம்பேட்டில் இருந்து சென்டிரல் தொடர் வண்டி நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* ராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் சந்திப்பு, பேசின் பாலம், எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர் சாலை, புரசைவாக்கம் வழியாகதங்கள் இலக்கை சென்று அடையலாம்.

* அண்ணாசாலையில் இருந்து ராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்சர் பென்னி ரோடு, மார்ஸல் ரோடு, நாயர் பாலம், டவுட்டன் வழியாக செல்லலாம்.

* சவுத்கெனால் ரோட்டில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக பயணிக்கலாம்.

வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »