சென்னை மெட்ரோ தொடர் வண்டி விரிவாக்க திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுள்ளார் பிரதமர் மோடி.
சென்னை:
சென்னை மெட்ரோ தொடர் வண்டி விரிவாக்க திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வர உள்ளார்.
இதற்காக அவர் இன்று காலை 8 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுள்ளார்.
காலை 10.30 மணியளவில் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு ஆளுநர் , முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar