Press "Enter" to skip to content

சென்னை வந்தார் பிரதமர் மோடி- விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

சென்னை மெட்ரோ தொடர் வண்டி விரிவாக்க திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வந்தார் பிரதமர் மோடி.

சென்னை:

சென்னை மெட்ரோ தொடர் வண்டி விரிவாக்க திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தார்.

இதற்காக அவர் இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு 10.30 மணியளவில் சென்னை வந்தடைந்தார்.

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு ஆளுநர் , முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »