Press "Enter" to skip to content

எங்களுடன் வந்தால் நல்லது… காங்கிரசுக்கு அழைப்பு விடுத்த கமல் ஹாசன் கட்சி

திமுக குறைவான தொகுதிகளை கொடுப்பதில் பிடிவாதமாக இருந்து, காங்கிரஸ் வெளியேறும் சூழ்நிலை வந்தால், மூன்றாவது அணி இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சென்னை:

தி.மு.க. -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை விட மிக குறைவான தொகுதிகளை கொடுக்க திமுக முன்வந்ததால் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். இதையடுத்து செயற்குழு கூட்டத்தை கூட்டி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, அப்போது 30 தொகுதிகள் வரை தந்தால் திமுகவுடன் கூட்டணியை தொடரலாம் என்று சிலர் கூறி உள்ளனர். சிலர் தனித்து போட்டியிடலாம் என்றும், சிலர் கமல் கட்சியுடன்  கூட்டணி அமைக்கலாம் என்றும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் நிர்வாகிகளின் இந்த கருத்து, தி.மு.க.வின் முடிவு ஆகிய விபரங்களுடன் வீரப்ப மொய்லி டெல்லி விரைந்துள்ளார். ராகுல் காந்தியை சந்தித்து, தமிழக நிலவரம் பற்றி எடுத்து சொல்வார். ராகுலின் ஆலோசனைப்படி அடுத்த கட்ட நகர்வு இருக்கும்.

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரசுக்கு கமல் ஹாசனின் மக்கள் நிதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வந்தால், அவர்களுக்கு நல்லது என ம.நீ.ம. பொதுச்செயலாளர் குமரவேல் கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சி எங்கள் தலைமையிலான மூன்றாவது கூட்டணிக்கு வந்தால் போதுமான  தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

திமுக குறைவான தொகுதிகளை கொடுப்பதில் பிடிவாதமாக இருந்து, காங்கிரஸ் வெளியேறும் சூழ்நிலை வந்தால், மூன்றாவது அணி இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »